தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தின் சார்பில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேசிய தர உறுதிச் சான்றிதழ் பெறத் தேவையான மருத்துவ உபகரணங்களை ஸ்பிக் நிறுவனத்தின் முழு நேர இயக்குனர் பாலு, உதவி பொது மேலாளர் ஜெயபிரகாஷ், துணை மேலாளர் மணிகண்டன் ஆகியோர் இணைந்து தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி., சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ. கீதாஜீவன் ஆகியோரிடம் நேரில் வழங்கினர். இந்நிகழ்ச்சியில், மாநக ராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் பிரியங்கா, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சிவக்குமார், கவுன்சிலர் கனகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



