தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் 50 பயனாளிகளுக்கு ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார்.
நிகழ்ச்சியில் துணை வட்டாட்சியர் சுரேஷ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பொன்னுச்சாமி, மாவட்ட தொழிலாளரணி துணை அமைப்பாளரும் முன்னாள் கவுன்சிலருமான அந்தோணி தனுஷ் பாலன், மாவட்ட ஆதிதிராவிடர் அணி டி.டி.சி.ராஜேந்திரன், எஸ்.ஆர்.கணேசன், முருகன், முத்துகிருஷ்ணன், இசக்கிமுத்து, ஜாஹீர் உசைன், நெல்சன், ரவி என்ற பொன்பாண்டி, ஊராட்சி செயலர் ஜெயரத்தினம், எம்.எல்.ஏ. உதவியாளர் பாபு, கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



