நிறுவனங்கள் கலாச்சாரத்தை எவ்வாறு அளவிடுகின்றன மற்றும் நிர்வகிக்கின்றன என்பதை மாற்றியமைக்கும் முன்னோடி செயற்கை நுண்ணறிவு கலாச்சார தொழில்நுட்ப நிறுவனமான கல்ச்சர்லிடிக்ஸ் நிறுவனத்தை 2025-ம் ஆண்டிற்கான உலகளாவிய வணிக சாத்தியக்கூறுகள் கொண்ட 200 நிறுவனங்களில் ஒன்றாக போர்ப்ஸ் இந்தியா – டி குளோபலிஸ்ட் தேர்வு செய்துள்ளது.
கல்ச்சர்லிடிக்ஸ் நிறுவனம் பெண்களால் நிறுவப்பட்டு பெண்களால் வழிநடத்தப்படுகிறது.
நிறுவனங்களுக்கான நுண்ணறிவு, தலைமைத்துவம், சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுகை பரிசீலனைகள் மற்றும் இணைப்புகள் மற்றும் கையகப்படுத்துதலில் மாற்றத்தை ஏற்படுத்தும் குழுவில் இந்தியாவின் பல்வேறு துறை சார்ந்த தலைவர்களில் சுமார் 20 சதவீதம் பேர், மற்றும் கூட்டாக 19 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் நிதி திரட்டி 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விரிவடைந்த புதுமை சார்ந்த நிறுவனங்கள் உட்பட 1000க்கும் மேற்பட்ட நிறுவனர்கள் இடம் பெற்றுள்ளனர். அதில் ஒன்றாக தற்போது கல்ச்சர்லிடிக்ஸ் இணைந்துள்ளது.
இது குறித்து கல்ச்சர்லிடிக்ஸ் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி யேசஸ்வினி ராமசாமி கூறுகையில், “செலக்ட் 200-ல் எங்கள் நிறுவனமும் இடம் பெற்றிருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. கலாச்சாரம் என்பது ஒரு வணிக தொழில்நுட்பம் ஆகும்.
கலாச்சாரத்தை நடத்தை அறிவியல் மற்றும் பொறுப்பான செயற்கை நுண்ணறிவுடன் டிகோட் செய்வதற்காகவே எங்கள் நிறுவனம் துவக்கப்பட்டது. இது நிறுவனங்கள், நிதி மற்றும் செயல்பாட்டு அளவீடுகளைப் போலவே கலாச்சாரத்தையும் அதன் தன்மை மாறாமல் நடத்த உதவுகிறது.
பணியிடங்கள் மிகவும் சிக்கலானதாகவும், உலகளவில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டதாகவும் வளர்ந்து வருவதால், தலைமை செயல் அதிகாரிகள் கலாச்சாரம் குறித்து அறிந்து கொள்வது என்பது மிகவும் அவசியமாகி வருகிறது” என்றார்.
இதன் இணை நிறுவனர் ஸ்மிதா தரூர் கூறுகையில், “தலைமைத்துவத்தின் அடுத்த சகாப்தத்தை கலாச்சாரம் வரையறுக்கும். 200 நிறுவனங்களின் பட்டியலில் எங்கள் நிறுவனமும் தேர்வு செய்யப்பட்டு இருப்பது என்பது நிறுவனங்களின் தலைவர்களுக்கு இந்த நுண்ணறிவு எவ்வளவு தேவை என்பதையும், இந்தியாவில் பிறந்த தீர்வு உலகிற்கு எவ்வளவு பொருத்தமானதாக இருக்கும் என்பதையும் இது காட்டுகிறது” என்றார்.



