கோவை ராம்நகரில் செயல்பட்டு வரும் கோவை நீரிழிவு நோய் சிறப்பு மையம் மற்றும் மருத்துவமனையின் சர்க்கரை நோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பாலமுருகனுக்கு கோல்டன் டாக்டர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் சார்பில் கோவை ராடிசன் ப்ளூ ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் டாக்டர். பாலமுருகனுக்கு மருத்துவ சேவையில் சிறந்து விளங்கும் மருத்துவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த கோல்டன் டாக்டர் விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதை இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில கிளை தலைவர் டாக்டர். செங்குட்டுவன், செயலாளர் டாக்டர். கார்த்திக் பிரபு மற்றும் இந்திய மருத்துவ கழகத்தின், மருத்துவமனைகளின் தலைவர் டாக்டர். அபுல் ஹாசன் ஆகியோர் வழங்கினர்.
கோவை நீரிழிவு நோய் சிறப்பு மையம் மற்றும் மருத்துவமனையின் சர்க்கரை நோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பால முருகன் 1000க்கும் மேற்பட்ட சர்க்கரை நோய் விழிப்புணர்வு மருத்துவ முகாம்களை நடத்தியுள்ளார்.
டாக்டர். பாலமுருகன் கோவை இந்திய மருத்துவச் சங்கத்தின் இணைச் செயலாளராக இருந்து வருகிறார்.
மேலும், இந்திய மருத்துவ சங்க மாநில சர்க்கரை நோய் விழிப்புணர்வு கமிட்டி தலைவராகவும் சேவை புரிந்து வருகிறார்.
சமீபத்தில் சர்க்கரை நோய் குறித்த ஆய்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் பங்கேற்று, தனது ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



