திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொறியாளர் அணி சார்பில் கலைஞர் கருணாநிதியின் 7 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அன்னூர் தெற்கு பள்ளிக்கு தி.மு.க. பொறியாளர் அணி மாநில துணை செயலாளர் அம்பாள் நந்தகுமார் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு தேவையான எல்இடி புரெஜெக்டர், ஸ்க்ரீன், மிக்ஸி உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது.
நிகழ்வில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன், மன்னீஸ்வரர் ஆலய அறங்காவலர் குழு தலைவர் நடராஜன், வட்டார கல்வி அலுவலர், பள்ளி தலைமை ஆசிரியர், திமுக நிர்வாகிகள், பொறியாளர் அணியின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



