அம்ருதா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் 90 பேர் வெள்ளி விழாவில் மீண்டும் ஒன்றுகூடி ரூ.5 லட்சம் கல்விக்கான உதவித்தொகை வழங்கினர்.
அம்ருதா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியின் 1996–2000ம் ஆண்டில் படித்த மாணவர்கள், வெள்ளி விழாவை கோயம்புத்தூர் வளாகத்தில் கொண்டாடினர். இந்த நிகழ்வில் இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா போன்ற பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் 90 முன்னாள் மாணவர்களும், 70 பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.
தங்கள் பட்டப்படிப்பு முடிந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை சிறப்பிக்கும் விதமாக, முன்னாள் மாணவர்கள் தங்கள் பழைய தோழர்கள் மற்றும் ஆசிரியர்க ளுடன் மீண்டும் இணைந்து, தங்கள் வாழ்க்கை தொடங்கிய வளாகத்தை மீண்டும் பார்வையிட்டனர்.
தொடர்ந்து, அம்ருதா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி முன்னாள் மாணவர்கள் சங்கம், அம்ருதா பல்கலைக்கழகத்தின் கல்விக்கான நிதிக்கு ரூ.5 லட்சம் நன் கொடையாக வழங்கினர்.
இந்நிகழ்விற்கு ஸ்வாமி தபஸ்யாம் ருதானந்தபுரி மற்றும் பொறியியல் பள்ளியின் தலைவர் டாக்டர் சசாங்கன் ராமநாதன் ஆகியோர் நேரில் தலைமை தாங்கினர்.
முன்னாள் மாணவர்கள் உறவுகள் இயக்குநர் பேராசிரியர் ஜே மிஸ்ரா ஆன்லைனில் இணைந்து, இந்த தொகுதியின் சாதனைகள் குறித்து தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.



