உலக சுற்றுச்சூழல் தினத்தை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கோவை சர்தார் வல்லபாய் படேல் கல்லூரி மாணவர்கள் கொண்டாடினர்கள். தொடர்ந்து சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மைக் கல்லூரி மாணவர்கள் டாப்ஸ்லிப் பில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகமான உலாந்தி மலைத் தொடருக்கு களப்பயணம் மேற்கொண்டனர்.
மாணவர்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வையும் வனவிலங்கு பாதுகாப்பு குறித்த ஆழமான பாராட்டையும் வளர்ப்பதன் நோக்கமாக இப்பயணம் ஏற்படுத் தப்பட்டது. சேத்துமடையில் உள்ள ஆனைமலையகத்தில் சிறப்பு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு அமர்வோடு அன்றைய நிகழ்வுகள் துவங்கின. பல்லுயிர் பெருக்கத்தை எடுத்துக்காட்டும் தகவல் தரும் திரைப்படத் திரையிடலில் மாணவர்கள் ஈடுபட்டனர்.
தொடர்ந்து ஆனைமலை காப்பகத் தின் சுற்றுச்சூழல் செல்வத்தையும் வர லாற்றையும் காட்சிப்படுத்தும் காப்பக அருங்காட்சியகத்திற்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். மாணவர்களுக்கு வாகன சவாரி மூலம் பல்வேறு வனவிலங் கினங்களின் இயற்கை வாழ்விடங்கள் மற்றும் சூழல் பற்றிய ஒரு அரிய பார்வையை இப்பயணம் வழங்கியது.



