fbpx
Homeபிற செய்திகள்அண்ணாமலைப் பல்கலைக்கழத்தில் ரூ.50 லட்சத்தில் ஆய்வகம்: என்.எல்.சி. தலைவர் திறந்து வைத்தார்

அண்ணாமலைப் பல்கலைக்கழத்தில் ரூ.50 லட்சத்தில் ஆய்வகம்: என்.எல்.சி. தலைவர் திறந்து வைத்தார்

-சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக சுரங்கவியல் கட்டடத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட பொறிகளின் இயக்கவியல் ஆய்வகத்தை என்எல்சி இந்தியா நிறுவன தலைவர் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி செவ்வாய்க் கிழமை திறந்து வைத்தார்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக சுரங்கவியல் கட்டடத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட பொறிகளின் இயக்கவியல் ஆய்வகம், ரூ.20 லட்சத்தில் அமைக்கப்பட்ட சூரிய சக்தி விளக்குகளுடன் கூடிய சுரங்கவியல் கட்டடத்துக்கான இணைப்புச் சாலை ஆகியவற்றின் தொடக்க விழா மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 39 தொழில் துறை பயிற்சியாளர்களுக்கான ஆணை வழங்கும் விழா சுரங்கவி யல் வளாகத்தில் நடைபெற்றது.

விழாவில் சுரங்கவியல் பட்டய படிப்புக்கான இயக்குநர் பேரா சிரியர் சி.ஜி.சரவணன் வரவேற்று பேசினார். என்எல்சியின் மனிதவள மேம்பாட்டு இயக்குநர் சமீர் ஸ்வரூப், நிலங்கள் மற்றும் சுரங்கங்களுக்கான செயல் இயக்குநர் ஐ.எஸ்.ஜாஸ்பர் ரோஸ்,என்எல்சி நிறுவன சமூகப் பொறுப்புகளுக்கான செயல் இயக்குநர் டிவிஎஸ்என். மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

விழாவில் என்எல்சி இந்தியா நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி கலந்துகொண்டு பொறிகளின் இயக்கவியல் ஆய்வகம் மற்றும் சூரிய சக்தி விளக் குகளுடன் கூடிய இணைப்புச் சாலை ஆகியவற்றை திறந்து வைத்தார்.

பின்னர், அவர் பேசுகையில், அண்ணாமலைப் பல்கலைக்கழக சுரங்கவியல் வளாகத்தின் உள் கட்டமைப்பு வசதிகளையும், பல்கலைக்கழகத்தில்பயின்று தற் போது என்எல்சியில் பணிபுரி வோரின் திறனையும் வெகுவாகப் பாராட்டினார்.

மேலும்,அண்ணாமலைப் பல் கலைக்கழகத்தில் சுரங்க பொறியியல் இளநிலை பட்டப்படிப்பை தொடங்குவது போன்ற எதிர்கால வளர்ச்சித் திட்டங்களுக்கு தம்மால் இயன்றதை செய்வதாக உறுதியளித்தார்.

பின்னர், தேர்ந்தெடுக்கப்பட்ட சுரங்கப்படிப்பு தொழில்துறை பயிற்சியாளர்களான 8 பெண்கள் உள்ளிட்ட 39 பேருக்கு ஆணைகளை சுரங்கத் துறை இயக்குநர் ஐ.எஸ்.ஜாஸ்பர் ரோஸ்,பேராசிரியர் சி.ஜி.சரவணன் ஆகியோர் வழங்கினர்.

விழாவில் என்எல்சி தலைமை பொது மேலாளர் ஜி.ஸ்ரீனிவாசபாபு, கடலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் சி.திருப்பதி, துணை முதல்வர் பாலாஜி சுவாமிநாதன் மற்றும் ஆசிரியர்கள்,மாணவர்கள் பங்கேற்றனர்.

நிகழ்வை பேராசிரியர்பி.சிவராஜ் ரியர் பி.சிவராஜ் தொகுத்து வழங்கினார். பேராசிரியர் எஸ்.பழனி வேல்ராஜா நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img