ஈரோட்டில் உள்ள உழவன் கலைக்குழு என்ற அமைப்பு சார்பில் கால்களில் சுமார் 2 அடிக்கும் உயரமான கட்டைகளை கட்டியபடி சிறுவர், சிறுமிகள் நேற்று சென்னிமலை முருகன் கோவிலில் உள்ள 1320 படிக்கட்டுகள் வழியாக மலை கோயிலுக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து படிக்கட்டுகள் வழியாக மீண்டும் அடிவாரத்துக்கு வந்தனர்.