Homeபிற செய்திகள்ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது மக்களுக்கு இலவச நீர்மோர் விநியோகம்:- அமைச்சர் காந்தி துவங்கி வைத்தார்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது மக்களுக்கு இலவச நீர்மோர் விநியோகம்:- அமைச்சர் காந்தி துவங்கி வைத்தார்

தமிழ்நாடு முழுவதும் நிலவும் கடும் கோடை வெப்பத்தால் ஏற்படும் பாதிப்பில் இருந்து பொது மக்களுக்கு தாகம் தீர்த்திடும் வகையில் ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை பேருந்து நிலையத்தில்
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி பொதுமக்களுக்கு நீர்மோர் பந்தல்களை திறந்து வைத்தார்.தொடர்ந்து அவர், இளநீர், தர்பூசணி பழம், முலாம்பழம், நுங்கு, வெள் ளரிக்காய், குளிர்பானங் கள், மோர் மற்றும் குடிநீர் ஆகியவற்றை வழங்கினார்.

இதில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் யி.லி.ஈஸ்வரப்பன், மாவட்ட அவைத்தலைவர் கிரி. சுந்தரமூர்த்தி, நகர செயலாளர் தில்லை, நகர பொருளாளர் சசிகுமார், நகர மன்ற தலைவர் ஹரிணி தில்லை, தலைவர் கமல் ராகவன், அவைத் தலைவர் ஜெகதீசன், மாவட்ட பிரதிநிதி விஜய ராகவன், கவுன்சிலர்கள் பிருந்தா சிலம்பரசன், பரிதா சலாம், செங்கையபாபு, நகர இளைஞரணி உமர் மற்றும் கழகத்தினர் உட னிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img