இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக மோதல் போக்கே நிலவி வருகிறது. அதிலும் கல்வான் மோதலுக்குப் பின்னர் நிலைமை மேலும் மோசமடைந்தது.
இந்தியாவுடன் மட்டுமின்றி அமெரிக்கா தொடங்கி கிட்டதட்ட அனைத்து உலக நாடுகள் உடனும் சீனா மோதல் போக்கையே வைத்து இருக்கிறது. இதனால் பல நாடுகளும் சீனா மீது அதிருப்தியில் உள்ளன.
இருப்பினும், பல உலக நாடுகளால் சீனாவிடம் அமைதியான போக்கையே வைத்து உள்ளது.
ஏனென்றால் உற்பத்தித் துறையில் சீனாவையே அவர்கள் நம்பி இருந்தனர். அதிலும் குறிப்பாக மொபைல் உற்பத்தி சந்தையில் அனைத்து நாடு களையும் விடச் சீனா தான் முன்னணியில் உள்ளது. ஆப்பிள் நிறுவனம் கூட தனது ஐபோன் உற்பத்திக்குச் சீனாவையே முழுவதுமாக நம்பி இருந்தது. இருப்பினும், இப்படி ஒரே நாட்டை மொபைல் உற்பத்திக்கு நம்பி இருப்பது ஆபத்து என்பதை கொரோனா காலத்தில் டெக் நிறுவ னங்கள் உணர்ந்து கொண்டன.
இதனால் இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கி உள்ளது. கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் இந்தியாவின் ஐபோன் ஏற்றுமதி 1 பில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது. அடுத்தாண்டு மார்ச் மாதத்திற் குள் இது 2.5 பில்லியன் டாலர்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டுடன் ஒப் பிடுகையில் கிட்டத்தட்ட இரட்டிப்பு வளர்ச்சியாகும்.
இந்தியாவில் ஐபோன் ஒட்டுமொத்த தயாரிப்பு மிகக் குறைந்த அளவுதான் என்றாலும் கூட ஐபோன் உற்பத்தியை அதிகரிக்க ஒன்றிய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மொபைல்போன் உற்பத்தி சந்தையில் சீனாவின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இந்தியாவில் மொபைல் போன் அசெம்பிள் செய்வதை ஊக்குவிக்க மத்திய அரசு கடந்த 2020இல் மிகப் பெரிய சலுகை திட்டத்தை அறிவித்தது. இதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் ஆப்பிள் உற்பத்தியாளர்கள், ஐபோன் உற்பத்தியை அதிகப்படுத்தி உள்ளனர். இருப்பினும், ஒப்பீட்டளவில் இப்போது இந்தியாவில் 30 லட்சம் ஐபோன்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. அதேநேரம் சீனாவில் 23 கோடி ஐபோன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.
இத்துறையில் சீனாவைப் பிடிக்க நாம் அதிக தூரம் செல்ல வேண்டும் என்றாலும் கூட சரியான பாதையில் செல்ல தொடங்கி உள்ளதாக வல்லுநர் கள் குறிப்பிடுகின்றனர். மொபைல் போன்களைத் தாண்டி டேப்லெட், லேப்டாப் உற்பத்திக்கும் சலு கையை இந்தியா அறிவித்து உள்ளது. இதன் மூலம் எலக்ட்ரானிக் சந்தையில் சீனாவுக்கு மாற்றாக நம்மால் உருவாக முடியும்.
இந்த சூழலை உருவாக்கி மொபைல் போன் உற்பத்தியில் இந்தியாவை தலைநிமிர வைத்தது பிரதமர் மோடி தான். அவரைப் பாராட்டி இத்தகைய பணி தொடர வாழ்த்துவோம்!