அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கத்தின் 40-வது ஆண்டு மாணிக்க விழா தூத் துக்குடியில் உள்ள மாணிக் கம் மஹாலில் வைத்து நடை பெற்றது. இதில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு சிறந்த தொழில் முதலீட்டாளர்கள், சிறந்த தொழில் நிறு வனங்கள், சிறந்த பெண் தொழில் முதலீட்டாளர்கள், சிறந்த நிறுவனங்கள் மற்றும் சிறந்த பொழுதுபோக்கு திரை யரங்கு உள்ளிட்ட விருதுகளை வழங்கினார்.
மேலும், சங்கத்தின் 40- வது ஆண்டின் கல்வெட்டை திறந்து வைத்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசியதாவது: ஒரு நிறுவனத்தினை 40-ஆண் டுகள் நடத்துவது என்பது சாதாரண விசயம் அல்ல.
அதற்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு முதலில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். ஒரு காலகட் டத்தில் சாதாரணமாக இருந்த தூத்துக்குடி மாவட்டத்தில் மிக தைரியமாக தொழில் முனைவோர்களாக முதலீடு செய்து தொழில் நகரமாக மாற்றி நாடே திரும்பி பார்க்கும் அளவிற்கு கொண்டு வந்திருப்பது நம் முன்னோர்கள், முன்னோடிகள்.
சென்னையில் மட்டுமே எல்லா தொழில் நிறுவனங்களும் வரக்கூடாது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் எல்லா தொழில் நிறுவனங்க ளும் வர வேண்டும்எல்லா மாவட்டங்களிலும் வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக முதல்வர் பல்வேறு மாவட்டங்களில் தொழில் நிறுவனங்களை கொண்டு வரும் நோக்கில் ஆசியாவிலேயே முதன் முறை யாக பர்னிசர் பார்க்கினை தூத்துக்குடிக்கு கொண்டு வருவதற்காக அடிக்கல் நாட்டி உள்ளார்.
அதே போல் விரை வில் டைடல் பார்க் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தமி ழகத்தில் தூத்துக்குடியில் நிறைய தொழில் நிறுவனங்களை கொண்டு வந்து நிறைய தொழில் முனைவோர்களை உருவாக்க வேண்டும் என்பதுதான் நம் அனைவருடைய கனவாக இருக்கின்றது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச் சர் கீதாஜீவன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், மேயர் ஜெகன் மற்றும் அகில இந்திய வர்த்தக தொழில் சங்க நிர்வா கிகள் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு தொழில் நிறுவத்தினர் என பலர் கலந்து கொண்டனர்.