fbpx
Homeபிற செய்திகள்‘நம்ம ஊரு சூப்பரு’ விழிப்புணர்வு பேரணி கீரணத்தத்தில் கோவை ஆட்சியர் துவக்கினார்

‘நம்ம ஊரு சூப்பரு’ விழிப்புணர்வு பேரணி கீரணத்தத்தில் கோவை ஆட்சியர் துவக்கினார்

கோவை மாவட்டம், சர்க் கார் சாமக்குளம் ஊராட்சி ஒன் றியம், கீரணத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மகளிர் சுயஉதவி குழுக்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு இணைந்து நடத்திய ‘நம்ம ஊரு சூப்பரு’ குறித்த விழிப் புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீ ரன் நேற்று (செப்.6) தொடங்கி வைத்தார்.

கோவை மாவட்டத்தில் உள்ள 228 கிராம ஊராட்சிகளிலும் ‘நம்ம ஊரு சூப்பரு’ என்னும் திட்டத்தின் கீழ 20.08.2022 முதல் 02.10.2022 வரை பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொது இடங்கள் மற்றும் நிறுவனங்களில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளுதல், பள் ளிகள் மற்றும் கல்லூரிகளில் குடிநீர் சுத்தம், சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை பணிகள் மேற்கொள்ளுதல், குடிநீர், சுகாதாரம் மற்றும் வீடுகளில் கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு சுய உதவி குழு உறுப்பினர்கள் மூலம் மேற்கொள்ளுதல், ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழி தடை மற்றும் அதற்கு மாற்றுஏற்பாடு செய்தல், மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, சர்க்கார் சாமக் குளம் ஊராட்சி ஒன்றியம், கீரணத்தம் ஊராட்சியில் மகளிர் சுயஉதவி குழுக்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்ட மைப்பு இணைந்து நடத்திய விழிப் புணர்வு பேரணி யினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, கீரணத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், ‘நம்ம ஊரு சூப்பரு’ குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியினை, மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் அனைவரும் எடுத்துக் கொண்டனர்.

மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை தரம் பிரித்தல் குறித்தும், நெகிழி கழிவுகள், மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகள், மறு சுழற்சி செய்ய முடியாத குப்பை உள்ளிட்டவை குறித்தும் மாணவர்களுக்கு செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

மகளிர்ணீ சுயஉதவிக்குழு பெண்கள், தூய்மைப் பணியாளர் கள், மாணவ மாணவிகளுக்கு மஞ்சைப் பைகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் வழங்கினார்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவி தா, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சந்திரா, உதவி இயக் குநர் (ஊராட்சிகள்) (பொ) கமலக்கண்ணன், கீரணத்தம் ஊராட்சி மன்றத் தலைவர் ராசு (எ) பழனிசாமி உட்பட பலர் பங் கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img