குடியரசு தின அணிவகுப்பு விழாவில் பங்கேற்ற விடுதலைப்போரில் தமிழகத்தின் பங்களிப்பை பறைசாற்றும் இரண்டு அலங்கார ஊர்திகள் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பேருந்து நிறுத்தத்தில் மக்கள் பார்வைக்காக இன்றும் நாளையும் வைக்கப்பட்டுள்ளன.
பெருமாநல்லூர் தேசிய நெடுஞ்சாலையில் செங்கப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகில் அலங்கார ஊர்தியினை மாவட்ட கலெக்டர் வினித் மலர்தூவி வரவேற்றார். உடன் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லட்சுமணன் உள்ளார்.



