fbpx
Homeதலையங்கம்முதல்வர் முடிவு; மாணவர்கள் மகிழ்ச்சி!

முதல்வர் முடிவு; மாணவர்கள் மகிழ்ச்சி!

மாணவர்கள் தெரிவித்த முறை கேடுகள், புகார்களை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளை மீண்டும் நடத்த முதலமைச் சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் நவம்பர்&டிசம்பர் 2020க்குண்டான பருவத் தேர்வு கள் ஒழுங்கு நிகழ் நிலைத் தேர்வாக கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது.

இத்தேர்வில் அதிக முறைகேடுகள் நடைபெற்றதாகவும் அதனால் தங்களுக்கு அதிக சிரமம் ஏற்பட்டதாகவும் முதலமைச்சர் கவனத்திற்கு மாணவர்கள் கொண்டு வந்தனர்.

இதில் மாணவர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களை கருத்தில் கொண்டும் அவர்களது வேலைவாய்ப்பு மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், நன்கு படிக்கும் சில மாணவர்கள் தங்களுக்கு மதிப்பெண்கள் வெகுவாக குறைந்துவிட்டதாக தெரிவித்ததை கருத்தில்கொண்டும் முதலமைச்சர் ஸ்டாலின், உயர்கல்விதுறை அமைச்சர், செயலாளர் மற்றும் அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து மாணவர்களின் நலன் கருதி கீழ்கண்ட சில முடிவுகளை எடுத்து மாணவர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளார்.


பிப்ரவரி 2021ல் நடைபெற்ற தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதை கருத்தில் கொண்டு மீண்டும் தேர்வுகள் நடத்தப்படும். இம்மாணவர்கள் இந்த தேர்வுக்கு தேர்வு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. பிப்ரவரி மாதம் நடந்த தேர்வில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மாணவர்கள் விரும்பினால் அவர்களும் இத்தேர்வினை எழுதலாம். தேர்வு 3 மணி நேரம் நிகழ் நிலைத் தேர்வாக நடைபெறும்.

பல்கலைக்கழகம் கொரோனாவிற்கு முன்பு பின்பற்றிய பழைய வினாத்தாள்கள் முறையே கடைபிடிக்கப்படும். தமிழகத்திலுள்ள மற்ற பல்கலைக்கழகங்கள் நடத்தியது போலவே மேற்கண்ட முறையிலேயே நடத்தப்படும். எதிர்வரும் ஏப்ரல்/மே 2021 பருவநிலை தேர்வுகளும் மேற்கண்ட முறையிலேயே நடத்தப்படும்.  முதல்வரின் முடிவால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img