fbpx
Homeபிற செய்திகள்28-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

28-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

கோவை மாவட்டத்தில் விவசாயிகளின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் அக் டோபர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டம் வரும் 28-ம் தேதி நடைபெறுகிறது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தரை தள கூட்ட அரங்கில் அன்று காலை 10.30 மணிக்கு, மாவட்ட ஆட்சியர் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட் டத்திற்கு தலைமை வகித்து நடத்த உள்ளார்.

கோவை மாவட்ட விவசாயிகள், விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் நேரடியாக கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான, பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.

விவசாயிகள் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடைமுறைகளை தவறாமல் பின்பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளித்து தங்களது விவசாயம் தொடர்பான பிரச்சனைகளுக்கு மனுக்களை அளிக்கலாம்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img