fbpx
Homeபிற செய்திகள்24 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் கோவை கலெக்டராக சமீரன் நியமனம் குமாரவேல்பாண்டியன் வேலூருக்கு மாற்றம்

24 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் கோவை கலெக்டராக சமீரன் நியமனம் குமாரவேல்பாண்டியன் வேலூருக்கு மாற்றம்

கோவை, விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், வேலூர், திருப்பத்தூர். நாகப்பட்டினம், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்கள் உட்பட 44 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். முன்னதாக, 20 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மாற்றிய நிலையில் மேலும் 24 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு :புதுக்கோட்டை மாவட்ட கலெக்டராக கவிதா ராமு, ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக கோபால சுந்தரராஜ், தஞ்சாவூர் மாவட்ட கலெக்டராக தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தேனி மாவட்ட கலெக்டராக முரளிதரன், நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டராக அருண் தம்புராஜ், சென்னை மாவட்ட கலெக்டராக விஜயராணி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டராக ராகுல் நாத், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டராக ஆர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல திருவள்ளூர் மாவட்ட கலெக்டராக ஆல்பி ஜான் வர்ஹீஸ், விழுப்புரம் மாவட்ட கலெக்டராக மோகன், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டராக ஸ்ரீதர் நியமனம், வேலூர் மாவட்ட கலெக்டராக குமரவேல் பாண்டியன், திருவண்ணாமலை கலெக்டராக முருகேஷ், திருப்பத்தூர் மாவட்ட கலெக்டராக அமர் குஷாவா, நாமக்கல் கலெக்டராக ஸ்ரேயா சிங், திண்டுக்கல் மாவட்ட கலெக்டராக விசாகன், கோவை மாவட்ட கலெக்டராக சமீரன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்ட கலெக்டராக வினீத், அரியலூர் மாவட்ட கலெக்டராக ரமண சரஸ்வதி, கரூர் மாவட்ட கலெக்டராக பிரபுசங்கர், விருதுநகர் மாவட்ட கலெக்டராக மேகநாத ரெட்டி, தென்காசி கலெக்டராக சந்திரகலா, ஈரோடு மாவட்ட கலெக்டராக கிருஷ்ண உன்னி, திருவாரூர் கலெக்டராக காயத்ரி கிருஷ்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img