பொற்சபை நாட்டியப் பள்ளியின் 11வது ஆண்டு விழா டிசம்பர் 14ம் தேதி சிட்ரா கலையரங்கத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோட்டா கோல்ட் நிறுவனத்தின் நிறுவனர் செந்தில் கோட்டா மற்றும் கவிதா செந்தில் கோட்டா, கெளரவ விருந்தினராக குழந்தைகள் நல மருத்துவர் கார்த்திக் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆச்சார்ய கலா நிபுணர் குரு நந்தினி செல்வராஜ் வழிநடத்தும் பொற்சபை நாட்டிய பள்ளியின் மாணவர்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
இவ்விழாவின் சிறப்பு அம்சங்களாக வாய்ப்பாட்டு, வீணை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் அறங்கேறின. வாய்ப்பாட்டு குரு முரளி கிருஷ்ணன் மற்றும் வீணை குரு மாலதி ஆகியோர் இணைந்து இசை நிகழ்சியை திறம்பட வழங்கினர்.
நிகழ்ச்சியின் முக்கிய அங்கமான தசாவதாரம், வர்ணம் மற்றும் பூசன் நடனம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது
மேலும் கோயம்புத்தூர் மான்செஸ்டர் சுழற்சங்கம் சார்பில் குரு நந்தினி செல்வராஜூக்கு பாரதநாட்ய கலையின் அழகை மேன்மைப்படுத்தி வருவதற்கான தொழில்சார் விருது சுழற்சங்க மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மூத்த மாணவர் சம்யுக்தாவும் , வெளிநாடுகளில் இருந்து நடனம் பயிலும் மற்றும் பல மாணவிகளும் தங்கள் அனுபவ உணர்வுகளை பகிர்ந்து கொண்டனர்.