விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ராமசாமிபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கிட்டங்கியை தமிழ்நாடு முதலமைச்சர் காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் குத்துவிளக்கு ஏற்றி பார்வையிட்டு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி உள்ளார்.



