கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி ராயர்ஊத்துபதி கிராமத்தில் காந்தியடிகளின் பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சமீரன் கலந்து கொண்டார். அருகில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, உதவி ஆட்சியர் பயிற்சி சரண்யா உள்ளிட்ட அலுவலர்கள் பலர் உடன் உள்ளனர்.



