திருவண்ணாமலையில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கொரோனா தொற்று மற்றும் உடல்நலக்குறைவால் உயிரிழந்த 4 கிராம நிர்வாக அலுவலர்கள் குடும்பங்களுக்கு ரூ.3.50 லட்சம் நிதியுதவியை மாநில செயலாளர் சுரேஷ் வழங்கினார். அருகில் மாவட்ட செயலாளர் ஏழுமலை, மாவட்ட தலைவர் ரமேஷ், மாவட்ட பொருளாளர் ஜெய்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.



