fbpx
Homeபிற செய்திகள்கோவையில் நடந்து சென்றவரிடம் செல்போன் பறிப்பு

கோவையில் நடந்து சென்றவரிடம் செல்போன் பறிப்பு

கோவை ராம்நகர் காளிதாஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம் என்பவரின் மகன் சிவகுமார்( 53).

இவர் நேற்று மதியம் ராம்நகர் ஐசிஐசிஐ வங்கி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 வாலிபர்கள் சிவகுமாரின் கையிலிருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.

இதுகுறித்து சிவக்குமார் காட்டூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து செல்போனை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகின்றனர்.

படிக்க வேண்டும்

spot_img