கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த், நாகர்கோவில், அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற 75&வது சுதந்திர தின விழாவில் தேர்தலில் ஊடக சான்று மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர் (ம) செயலராக சிறப்பாக பணியாற்றிய மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜான் ஜெகத் பிரைட்டுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் உடனுள்ளனர்.



