நீலகிரி மாவட்டம், உதகை அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் 75&வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசிய கொடியை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஏற்றி வைத்து, மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரை பயனாளிக்கு வழங்கினார்.
உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தனப்பிரியா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி ஆகியோர் உள்ளனர்.



