fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீசேஷாஸ் சர்வதேச பப்ளிக் பள்ளியில் மாதிரி ஐக்கிய நாடுகள் கருத்தரங்கம்

ஸ்ரீசேஷாஸ் சர்வதேச பப்ளிக் பள்ளியில் மாதிரி ஐக்கிய நாடுகள் கருத்தரங்கம்

சேலம் ஏற்காடு அடிவாரம் பகுதியில் உள்ள ஸ்ரீசேஷாஸ் இண்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி, இந்திய சர்வதேச மாதிரி ஐக்கிய நாடுகள் 2022-சேலம் நான்காவது அத்தியாயத்தை எடுத்து, இரண்டு நாட்கள் நடத்தியது.


இக்கருத்தரங்கில் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு பள்ளிகளிலிருந்து சுமார் 250-க்கும் மேற்பட்ட மாண வர்கள் கலந்து கொண்டனர்.சிறப்பு விருந்தினர் கேரள உயர்கல்வி கவுன்சில் முன்னாள் செயல் தலைவர் மற்றும் இந்தியாவின் ஐக்கிய நாடுகளின் சபையின் நிரந்தரப் பிரதிநிதியுமாகிய ஸ்ரீனிவாசன் பேசியதாவது:

ஐக்கிய நாடுகள் தனது அளப்பரிய பங்களிப்பை இவ்வுலகிற்கு வழங்கி வருகிறது. உலகின் 193 நாடுகள் ஒருங் கிணைந்து, முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முற்படுகின்றன.

ஐக்கிய நாடுகளின் மாதிரி சபை ஏற்படுத்த காரணம் 193 நாடுகளுக்கான வாய்ப்புகளையும், பொறுப்புகளையும் உணர்த்து வதற்கே ஆகும்.
இதன் மூலமாக இளம் வயதினருக்கு நல்லதொரு அனுபவம் மற்றும் உள்ளாற்றலை வெளிப்படுத் துவதற்கும் ஒவ்வொரு பிரதிநிதியா ளர்களுக்கான விதிமுறைகளை சரியாக பின்பற்றவும், போட்டியை நம்பகத்தன்மையுடையதாகவும் நடத்துவீர்கள் என நம்புகிறோம்.

உங்கள் பங்களிப்பை காணும் போது ஐக்கிய நாடுகள் சபைக்கு அளப்பரிய பங்களிப்பை அளிப்பீர்கள் என தெளிவாக தெரிகிறது என்றார்.
மாணவர்களுக்கு ஐ.நா.சபையின் அங்கீகாரம் பெற்ற சான்றிதழும் வழங்கப்படுகிறது.

சிறந்த பேச்சாளாருக்கான விருது வழங்கப்பட்டு மும்பையில் நடைபெற உள்ள ஐ.ஐ.எம்.யு.என். சர்வதேச சாம்பியன்ஷிப் கருத்தரங்கில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

ஸ்ரீசேஷாஸ் இண்டர்நேஷனல் பப்ளிக் பள்ளித் தலைவர், தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் உள் ளிட்டோர் பங்கேற்றனர். சேஷாஸ் ஐ.ஐ.எம்.யு.என். உலகளாகிய மனப்பான்மையை ஒவ்வொரு இந்தியனும் பெறவும் வளர்ச்சி அடையவும் செய்வதே கருத்தரங்கின் நோக்கமாகும்.

இந்திய சர்வதேச மாதிரி ஐக்கிய நாடுகளில் இந்தியாவின் பண்பாடுகள், மதிப்புகள் மற்றும் கலாச்சாரத்தை நினைவுபடுத்தி தங்கள் செயல்களில் உலகளவில் நிலை நிறுத்த சேஷாஸ் ஐ.ஐ.எம்.யு.என் இந்திய கொடியை ஏற்பதில் பெருமை கொள்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img