fbpx
Homeதலையங்கம்வசிப்பிடம் சென்று உதவி செய்யுங்கள்

வசிப்பிடம் சென்று உதவி செய்யுங்கள்

கொரோனா கொடிய நோய் கோரத் தாண்டவமாடும் நிலையில் பிணி நீக்கும் போர்க்களத்தில், பசிபோக்கும் பணியில் ஈடுபடுவீர் என்று திமுக தொண்டர்களுக்கு திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் ‘ஒன்றிணைவோம் வா!’ செயல் திட்டத்தை மேற்கொண்டு வரும் திமுகவினர் மக்களின் அடிப்படை தேவையான உணவினை வழங்கிடும் பணியில் ஈடுபட வேண்டும் எனக்கேட்டுக் கொள்கிறேன்.

ஏழை& எளிய மக்கள், வீட்டில் சமைக்க முடியாத சூழ்நிலையில் இருப்பவர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட யார் யாருக்கெல்லாம் உணவு தேவைப்படுகிறது என்பதை அறிந்து உணவை சமைத்து அவர்களுக்கு வழங்கி, பசி போக்கிடும் பெரும்பணியை மேற்கொள்ள வேண்டும்.

தேவைப்படுவோரின் வசிப்பிடம் அருகே சென்று வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.


இது நிச்சயமாக போற்றுதலுக்குரிய செயல். மு.க.ஸ்டாலின் காட்டிய வழியை எல்லாருமே பின்பற்றி அனைவரும் வேலையிழந்து, தங்க இடமின்றி, சாப்பிடுவதற்கு உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கிடுவது தான் இன்றைய காலக்கட்டத்தில் மிகத் தேவையான ஒன்றாகும்.

படிக்க வேண்டும்

spot_img