தடுப்பூசிகளின் பற்றாக்குறை ஒரு பக்கம், கொஞ்ச நாள் கழித்து ஊசி போட்டுக்கொள்ளலாம் என்ற அறிவாளிகள் ஒரு பக்கம் இந்தியாவின் பறந்துபட்ட மக்கள் எண்ணிக்கையில் குறைவான சதவிகிதத்தினரே தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கும் நிலையில் எப்படி மூன்றாவது அலையை நாம் எதிர்கொள்ளபோகிறோம்.
இந்தநிலையில் தொற்று கொஞ்சம் குறைந்து இருப்பதால் முழு ஊரடங்கில் இருந்து சில தளர்வுகள் அளிக்கப்பட்டிருக்கின்றன.
பேருந்துகள், ரயில்கள் ஓட ஆரம்பித்திருக்கின்றன, கடைகள் திறக்கப்பட்டிருக்கின்றன.
மத்திய அரசும், மாநில அரசும் என்னதான் கடுமையாக பாடுபட்டாலும் மக்களுக்குத்தான் இதில் முழு பொறுப்பு இருக்கிறது.
கடைகள் திறந்தாச்சு, காவலர்கள் கடுமையாக நடந்துகொள்வது இல்லை என்ற ஒரே காரணத்திற்காக எந்த அத்தியாவசியமும் இன்றி சும்மாசுற்றும் மக்கள்தான் மூன்றாவது அலையின் விருந்தினர்கள்.
தேவையில்லாமல் வெளியில் அலைவதை நிறுத்தி தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இன்னும் கொஞ்ச நாளைக்கு மேலும் கவனமாக இருந்தால் மட்டுமே மூன்றாவது அலையில் இருந்து நாம் தம்பிக்க முடியும்.
இந்த நூற்றாண்டின் மிகுந்த அச்சமூட்டும் சொல் கொரோனா. முதல் அலை உலகம் முழுக்க பல லட்சம் உயிர்களை கொண்டு போனது கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.
இரண்டாம் அலையும் அதிகமான உயிர்களை பலி வாங்கியது.
எனவே மூன்றாவது அலை வருவதற்குள் தடுப்பூசியை பொருமளவில் செலுத்திக்கொண்ட நாடுகள் தப்பினர்.