மரம் வளர்ப்பை மிகப்பெரிய சமுதாய இயக்கமாக எடுத்துச் சென்றார் மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம்.
அவரின் அடியொற்றி நடிகர் விவேக் போன்றோர் மிகச்சிறப்பாக செயலாற்றி வந்தனர். இப்போது அவர்கள் இருவரும் நம்மிடையே இல்லை.
ஆனாலும் ஒரு சிலர் முனைப்புடன் செயல்பட்டு வருவது நம்பிக்கை தருவதாக உள்ளது.
ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவகாலத்தில் பல இடங்களிலும் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் பணியை ஒவ்வொருவரும் முன்னெடுக்க வேண்டும்.
நிறைய இடவசதி உள்ளோர் வீட்டிலேயே மரம், செடி, கொடிகளை வளர்க்கலாம். அபார்ட்மென்ட்களில் வசிப்போர் கிச்சன் கார்டன், மாடித் தோட்டம் அமைக்கலாம்.
அலுவலக வளாகத்தில் செடி, கொடிகள், மரக்கன்றுகளுக்காக சிறிது இடத்தை ஒதுக்கலாம். மரம், செடி, கொடிகள் நிறைந்த பசுமையான இயற்கை சூழ்நிலையில் காலை, மாலை இருவேளையும் கைவீசி நடப்பது நுரையீரலுக்கு போதுமான ஆக்ஸிஜனை அள்ளித்தரும்.