fbpx
Homeதலையங்கம்நடவடிக்கை நிச்சயம்

நடவடிக்கை நிச்சயம்

அதிமுக ஆட்சியில் கூட்டுறவுத்துறையில் எப்படியெல்லாம் மோசடி செய்தார்கள் என்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. தற்போது இந்த மோசடி தொடர்பான ஆய்வு நடந்து வருகிறது.

ஆய்வறிக்கையை வரும் 31.7.2021க்குள் அந்தந்த இணை பதிவாளர்கள் கூட்டுறவு துறை பதிவாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி விசாரணை குழு தனது விசாரணையை முழு வீச்சில் துவங்கியுள்ளது.
யார் தவறு செய்திருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

எனவே இந்த மோசடியில் யார் யார் கம்பி எண்ணப் போகிறார்கள் என்ற தகவல் மிக விரைவில் வெளி வர உள்ளது.

பயிர்கடன் தள்ளுபடி என்றால், விளைநிலத்தில் காசை கொட்டி ஒரு பைசா கூட திரும்பி வராமல் இயற்கை பேரிடரில் சிக்கி பரிதவிக்கும் உண்மையான விவசாயிகளுக்கு போய் சேர வேண்டும்.

மாறாக தில்லுமுல்லு வேலையில் இறங்கி தில்லாலங்கடி காரியம் மூலம் அரசு கஜானாவை காலியாக்கும் நபர்களுக்கு சென்று விடக்கூடாது.

இதனை மக்களின் ஆட்சி நடத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு கண்டிப்பாக செய்யும்.

படிக்க வேண்டும்

spot_img