முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில், கொரோனா பெருந்தொற்றுப் பரவலை தவிர்க்கும் நோக்கில் தமிழ்நாடு அரசின் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சாரத்தை துவக்கி வைத்தார்.
விழாவில் கொரோனா உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த விழாவில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



