fbpx
Homeபிற செய்திகள்கோவை மேயரிடம் பயன்பாட்டிற்காக 2 டிராக்டர், ஷ்ரெடிங் இயந்திரம் வழங்கல்

கோவை மேயரிடம் பயன்பாட்டிற்காக 2 டிராக்டர், ஷ்ரெடிங் இயந்திரம் வழங்கல்

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.69-க்கு உட்பட்ட சாய்பாபா காலனி, பாரதி பூங்கா 5-வது வீதியில் கோவை மாநகராட்சி பயன் பாட்டிற்கு, தோட்டக்கழிவு மேலாண்மைக்காக 2 டிராக்டர், ஷ்ரெடிங் இயந்திரங்களை புரூக் பீல்ட் நிறுவனம் சார்பில், முதன்மை செயல் அலு வலர் அஸ்வின் பால சுப்பிரமணியம், கோவை மேயர் கல்பனாவிடம் வழங்கினார்.

கோவை மாநகராட் சியின் 100 வார்டுகளிலும் சேகரமாகும் தோட்டக் கழிவுகள் மற்றும் மரக் கழிவுகளை வெள்ளலூர் உரக்கிடங்கிற்கு கொண்டு செல்வதால் எளிதில் தீப் பிடித்து சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.

இதனைத் தவிர்க்க வார்டு பகுதிகளிலேயே மரக்கழிவுகளை இதற் கான பிரத்யேக இயந்திரத்தால் பொடி செய்து அப்பகுதியிலேயே மரங்களுக்கு உரமாக பயன்படுத்தவும், நுண் உரக்கிடங்கில் மக்கும் கழிவுகளுடன் சேர்த்து உர மாக்கவும் பயன்படுகிறது. இதனால் வெள்ளலூர் உரக்கிடங்குக்குச் செல்லும் குப்பையின் அளவு குறைக்கப்படுகிறது.

இவ்வகையான இயந் திரம் மண்டலத்திற்கு ஒன்று வீதம் 5 இயந்தி ரங்கள் உள்ளன. தற்போது புரூக் பீல்டு மால் நிர்வாகத்தினர் சிஎஸ்ஆர் நிதித் திட்டத்தின் கீழ் மாநகராட்சி பயன்பாட் டிற்காக, தோட்டக்கழிவு மேலாண்மைக்காக ரூ.30 இலட்சம் மதிப்பிலான 2 டிராக்டர், ஷ்ரெடிங் இயந்திரங்களை வழங்கி உள்ளனர்.
இந்நிகழ்ச்சிக்கு, மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா முன்னிலை வகித்தார்.

மாநகராட்சி நகர்நல அலுவலர் மரு.சதீஷ்குமார், 69-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பி.எஸ்.சரவணக்குமார், உதவி ஆணையர் (நிர்வாகம்) சரவணன், புரூக் பீல்டு மார்க்கெட்டிங் மானேஜர் சுஜாதா, உதவி பொறியாளர் கமலக்கண்ணன், மண்டல சுகாதார அலுவலர் திரு மால் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img