கோவை புலியகுளம் புனித அந் தோணியார் உயர்நிலைப்பள்ளிக்கு புதிய தாளாளர் ஆக அருட்பணி ஆரோக்கிய ததேயுஸ் நியமனம் செய்யப் பட்டார்.
இதற்கான பதவியேற்பு விழா கோவை மறைமாவட்ட முதன்மை குரு பேரருள் ஜான் ஜோசப் ஸ்தனிஸ் தலைமையில் அந்தோணியார் உயர்நிலைப்பள் ளியில் நடைபெற்றது.
நிகழ்வில் கோவை மறைமாவட்ட அனைத்து பள்ளிகளின் முதன்மை செயலாளர் அருட்பணி மரிய ஜோசப், பள்ளியின் முன்னாள் தாளாளர் அருட்பணி பால்ராஜ், துணை தாளாளர் அருட்பணி பிச்சை ராபர்ட், புதிய துணை தாளாளராக தேர்வு செய்யப்பட்ட அருட்பணி ஞானப்பிரகாசம், தலைமை ஆசிரியை அமலோற்பவ மேரி, புனித அந்தோணியார் தொடக்கப்பள்ளி தலை மை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், புதிய தாளாளருக்கு வாழ்த்துகளையும், சிறப்பாக பணிபுரிந்த முன்னாள் தாளா ளருக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.