கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் ஒண்டிப்புதூர், பட்டணம் சாலையில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து ஆர்.கே.கார்டன் பகுதியிலிருந்து சிந்து நகர் வரை சுமார் 350 மீட்டர் தொலைவிற்கு உடனடியாக தார்சாலை, புதிய தெரு விளக்குகள் அமைக்கவும், அப்பகுதியிலுள்ள மழைநீர் வடிகாலை தூர்வாரவும் சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார்.
உடன் மாமன்ற உறுப்பினர்கள் சாந்தாமணி, சுமித்ரா, மண்டல உதவி ஆணையர் முத்துராமலிங்கம், மண்டல சுகாதார அலுவலர் முருகா, உதவி பொறியாளர் யோகசித்ரா, சுகாதார ஆய்வாளர் முருகேசன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.