கோவை மாநகராட்சி நல்லாம்பாளையம் ஜெயந்தி நகர் பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நகர்நல மையம் கட்டுமானப் பணியினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.
உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, வடக்கு மண்டல குழு தலைவர் கதிர்வேல், 18வது வார்டு மாமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், உதவி ஆணையாளர் மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர் செந்தில்பாஸ்கர், உதவி நகரமைப்பு அலுவலர் (பொ) விமலா, உதவி பொறியாளர் மரகதம், சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.