கோவை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் இரண்டாவது பொதுக்குழுவும், 2022-2024 ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவும் நடைபெற்றது.
பட்டையத் தலைவர் மயில்சாமி தலைமை தாங்கினார். புதிய தலைவராக வி.ரவிக்குமார் ,செயலாளராக S.சாந்தநரசிம்மன், பொருளாளராக K.ரமேஷ் ஆகியோருடன் 23 செயற்குழு உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
சிறப்பு விருந்தினராக இக்கல்லூரியின் முன்னாள் (1959-1962) மாண வரும், former deputy transport commissioner M.S..சண்முகசுந்தரம் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து சிறப்புரை நிகழ்த்தினார்.
விழாவில் 30 ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
இனிவரும் ஆண்டுகளிலும் அரசு தொழில் நுட்பக்கல்லூரியில் பயிலும் ஏழை மாணவ, மாணவியருக்கு கல்விக் கட்டணம் முழுவதையும் முன்னாள் மாண வர்கள் சங்கமே ஏற்கும் என அறிவிக்கப்பட்டது.



