fbpx
Homeதலையங்கம்கொரோனாவை விரட்ட அரசுக்கு உதவிக் கரம் நீட்டுவோம்

கொரோனாவை விரட்ட அரசுக்கு உதவிக் கரம் நீட்டுவோம்

வரலாறு காணாத கொடிய கொரோனா வைரஸ் தாக்கத்தை சமாளிக்கவும், மக்களின் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கவும், மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கையை உயர்த்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன.

இந்த பேரிடரை எதிர் கொள்வதற்கு அரசுக்கு கூடுதலான நிதி ஆதாரங்களை செலவிட வேண்டிய தேவையும் உள்ளது. எனவே அரசின் முனைப்பான முயற்சிகளுக்கு நமது சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தங்களால் இயன்ற வகையில் நிதி உதவி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.


முதலமைச்சரின் பொது நிவாரண உதவிக்கு தாராளமாக நன்கொடை வழங்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆகவே தமிழக மக்கள் தங்களால் இயன்ற நிதியை முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க முன் வரவேண்டும்.

இந்த நன்கொடைகள் அனைத்தும் ஆக்சிஜன் உற்பத்தி சேமிப்பு நிலையங்கள் அமைத்தல், ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகளை அமைத்தல், ஆக்சிஜன் செறிவூட்டும் எந்திரங்கள், உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள், பிற மருத்துவ உயிர் காக்கும் மருந்துகள், பிற மருத்துவ கருவிகளை வாங்குவது போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.


சமுதாயத்தின் மேல்தட்டில் உள்ளவர்கள் சிலர் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கியுள்ளனர். திரையுலகத்தைச் சேர்ந்தவர்களும் நிதிஉதவி அளித்துள்ளனர். ஆகவே தமிழகத்திலுள்ள அனைத்து தட்டு மக்களும் தங்களால் இயன்ற நிதி உதவியை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி தமிழகத்தில் பரவிய கொரோனாவை விரட்ட அரசுக்கு உதவிக் கரம் நீட்டுவோம்.

படிக்க வேண்டும்

spot_img