fbpx
Homeபிற செய்திகள்இஸ்லாமிய படிப்பில் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

இஸ்லாமிய படிப்பில் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

நீலகிரி மாவட்டம் உதகை பிங்கர் போஸ்ட் பகுதியில் இஸ்லாமியர்களுக்கான உருது கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.

இக்கல்லூரியில் படித்து முடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் பட்டமளிப்பு விழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 21 மாணவ மாணவிகளுக்கு அராபிய பாடத்தில் உயர் கல்வி முடித்ததற்கான பட்டங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், நீலகிரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த பள்ளிவாசல் உலமாக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img