fbpx
Homeதலையங்கம்ஆக்சிஜன் தேவைக்கு இடைக்கால ஏற்பாடுகள் போதுமே!

ஆக்சிஜன் தேவைக்கு இடைக்கால ஏற்பாடுகள் போதுமே!

அரசு உண்மையில் கவனம் செலுத்த வேண்டியது தடுப்பூசி தயாரிப் பில் தானே தவிர ஆக்சிஜன் உற்பத்தி யில் அல்ல. ஒரு காலத்தில் தடுப்பூசி மருந்து ஆராய்ச்சி, தயாரிப்பு இரண்டிலும் தமிழகம் தான் இந்தியாவில் முதன்மை பெற்றிருந்தது என்கிற வரலாறு பலருக்கும் மறந்துவிட்டது.

கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டும், குன்னூரில் உள்ள பாஸ்டியர் ஆய்வகமும் நாய்கடிக்கும், அம்மை நோய்க்குமான தடுப்பூசி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த நிறுவனங்கள். காலப்போக்கில் அந்த நிறுவனங்கள் முக்கியத்துவம் இழந்தன. தடுப்பூசி ஆராய்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட் டதால் அந்த நிறுவனங்கள் சோர்ந்து போய் முடங்கிவிட்டன.


செங்கல்பட்டு அருகில் 150 ஏக்கர் நிலப்பரப்பில் இந்துஸ்தான் பயோடெக் என்கிற நிறுவனம் தொடங்குவதற்கு 2012ம் ஆண்டு முடிவெடுக்கப்பட்டது. அங்கே ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் கட்டுவது என்று முடிவெடுக்கப் பட்டது. அதற்காக ரூ.594 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 2013ல் கட்டுமானப் பணியும் தொடங்கப்பட்டது.


காலதாமதத்தால் இப்போது அதற்கான மதிப்பீடு சுமார் ரூ.900 கோடியாக உயர்ந்திருக்கிறது. இன்னும் சில கோடிகளில் பணிகள் முடிந்துவிட்டால் உலகத்தரம் வாய்ந்த தடுப்பூசி தயாரிப்பு மையம் தமிழகத்தில் செயல்பட தொடங்கிவிடும்.

ஆண்டொன்றுக்கு சுமார் 60 கோடி தடுப்பூசி தயாரிக்கும் திறன் கொண்ட செங்கல்பட்டு இந்துஸ்தான் பயோடெக் நிறுவனம் தனது உற்பத்தியை தொடங்குவதற்கு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதும் தமிழகத்தில் மருந்து தயாரிப்பு குறிப்பாக தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிப்பதும் தான் அரசின் முனைப்பாக இருக்க வேண்டும்.


அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துதல், கிராமப் புறங்கள் வரை உருவாக்கப்பட்டிருக்கும் சுகாதார கட்டமைப்பை சீரமைத்தல், கொள்ளை நோய்த்தொற்று மட்டுமல்லாமல் ஏனைய தொற்றுகளையும் எதிர்கொள்ளும் வகையிலான மருத்துவ திட்டமிடல் போன்றவைதான், அவசியமே தவிர இடைக்கால பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு நீண்டநாள் திட்டங்களை தீட்டுவது அவசியமில்லை என்று தோன்றுகிறது.
ஆக்சிஜன் தேவைக்கு இடைக்கால ஏற்பாடுகள் போதுமே.

படிக்க வேண்டும்

spot_img