Homeபிற செய்திகள்திருப்பூரில் தடுப்பூசி முகாம்கள்

திருப்பூரில் தடுப்பூசி முகாம்கள்

முதல்வரின் ஆணைக்கிணங்க, திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி போடும் முகாம்கள் நடைபெற்றுவருகின்றன.

சுமார் 51 இடங்களில் நேற்று முன்தினம் (செப்.6) தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு 21,800 நபருக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நீதிமன்றம் மற்றும் கல்லூரிகள்என 9 இடங்களில் நடந்த சிறப்பு முகாம்கள் மூலம் தொழிலாளர்கள் மற்றும் அந்த பகுதிவளாகத்தில்பணியாற்றும்பணியாளர்கள்அனைவருக்கும்தடுப்பூசிவழங்கும்பணிகள்சிறப்புகுழுக்கள்மூலம்நடத்தப்பட்டுவருகின்றன.

எனவே பொதுமக்கள், தொழிலாளர்கள், பணியாளர்கள், அலுவலர்கள், முதியோர், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எனஅனைவரும்தடுப்பூசி முகாம்களை பயன்படுத்தி, மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img