டிஎஸ்பி குளோபல் இன்னோவேஷன் ஃபண்டிற்கான (DSP GIF) இந்தியாவின் முதல் எஸ்ஐபி (SIP)-ஐ மையமாகக் கொண்ட என்எஃப்ஓ (NFO)வை அறிமுகப்படுத்துவதாக டிஎஸ்பி இன்வெஸ்ட் மென்ட் மேனேஜர்ஸ் அறி வித்துள்ளது.
டிஎஸ்பி ஜிஐஎஃப் என்பது நிதிகளின் நிதியாகும் (இது வெவ்வேறு சர்வதேச நிதிகளில் முதலீடு செய்யும்). இது அந்தந்த இடங்களில் நிபுணர்களால் நடத்தப்படும், செயல்படும் மற்றும் செயலற்ற நிதிகளின் ஆரோக்கியமான கலவையில் முதலீடு செய்யும்.
இப்புத்தாக்கக் கருத்தாக்கம் இன்று பல நாடுகளிலும் துறைகளிலும் பரவலாகவே ரூன்றியுள்ளது. இது தொழில் நுட்பத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தப் படவில்லை. புத்தாக்க நிறுவனங்கள் பாரம் பரிய மாடல்களை மாற்றிய மைத்து, மாறாத பாரம்பரிய வணிகங்களிலிருந்து சந்தையைக் கைப்பற்றுகின்றன. எனவே, டிஎஸ்பி ஜிஐஎஃப் ஆனது நன்கு பன்முகப்படுத்தப்பட்ட தயாரிப்பாக வடிவமைக்கப் பட்டுள்ளது.
இது செயல்படும் மற்றும் செயலற்ற நிதிகளின் அடிப்படை வழங்கு பட்டியல் மூலம் முதலீட்டாளர்களுக்கு 200 பங்குகளை அறிமுகப்படுத்துகிறது.
டிஎஸ்பி ஜிஐஎஃப்க் கான புதிய நிதிச்சலுகை, ஜனவரி 22 அன்று தொ டங்கி பிப். 7 அன்று முடிவடைகிறது.
“எங்களின் எஸ்ஐபிஐ மையமாகக் கொண்ட ஜிஐஎஃப்மூலம், முதலீட்டாளர்களுக்கு வகையினத்தில் சிறந்த உலகளாவிய நிறுவனங்களில் ஒரு ஒழுக்கமான முறையில் முதலீடு செய்ய உதவுகிறோம்.
புளூபாக்ஸ், பிளாக்ராக், ஆர்க் அண்ட் மோர்கன் ஸ்டான்லி ஃபண்டுகள் போன்ற டொமைன் நிபுணர்களுடன் கூட்டு சேர்ந்து, புதுமை மற்றும் தொழில்நுட்ப முதலீட்டில், முதலீட்டாளர்களுக்கு ஒரே ஃபண்டில் பலவிதமான ஃபண்டுகளின் செயல்திட்டக் கலவையை வழங்க விரும்புகிறோம்.
20 வருட வரலாற்றின் கடந்த கால சான்றுகள் எஸ்.ஐ.பி. வருமானம் மொத்த வருமானத்தை விட சிறந்தது என்பதைக் காட்டுகிறது.
குறிப்பாக இந்த தீம்கள் நியாயமான விலையில் கிடைக்கும் போது” என்று கூறுகிறார், டிஎஸ்பி இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்களின் எம்.டி. மற்றும் சிஇஓ கல்பென் பரேக்.



