கோவை பள்ளபாளையத்தைச் சேர்ந்த மதுராந்தகி மனோகரன் என்பவர் 11,300 அரிசியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தை வரைந்துள்ளார். 5,000 அரிசியில் தமிழ் வாழ்க என்றும் எழுதி அசத்தியுள்ளார். இந்த படத்தை பார்வையிட்டு அவருக்கு கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் பாராட்டு தெரிவித்தார்.