நீலகிரி மாவட்டம், உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில், தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நலவாரியம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு பெற்ற 500 தொழிலாளர்களுக்கு ரூ.9.75 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் வழங்கினார்.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, உதகை ஊராட்சி ஒன்றியத் தலைவர் மாயன் (எ) மாதன், தொழிலாளர் உதவி ஆணையர் லெனின் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் உள்ளனர்.



