சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைமையகத்தில் நடந்த நிகழ்வில், வங்கித் தலைவர் என்.கிருஷ்ணராஜ், 10 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.1.75 லட்சம் கடனுதவி மற்றும் வேட்டி, சேலையை வழங்கினார்.
வங்கி உதவிப் பொதுமேலாளர்கள் எஸ்.சந்திரமோகன், எஸ்.குமரேசன், வி.ராஜசேகரன், மேலாளர்கள் எஸ்.தமிழ்செல்வன், எல்.குமார், எஸ்.சாந்தி, ஆர். சக்திபிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



