fbpx
Homeபிற செய்திகள்கோவை அவினாசிலிங்கம் கல்வி நிறுவனத்தில் பேரிடர் மேலாண்மையில் பெண்கள் தலைமைத்துவம்: ஒருநாள் பயிலரங்கு

கோவை அவினாசிலிங்கம் கல்வி நிறுவனத்தில் பேரிடர் மேலாண்மையில் பெண்கள் தலைமைத்துவம்: ஒருநாள் பயிலரங்கு

கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர் கல்வி நிறுவனத்தின் மகளிர் ஆய்வுகள் மையம் மற்றும் சிவில் பொறியியல் துறை இணைந்து, “பேரிடர் மேலாண்மையில் பெண்கள் தலைமைத்துவம் மற்றும் பாதுகாப்பு” என்ற தலைப்பில் ஒரு நாள் பட்டறையை ஏற்பாடு செய்தன.

துணைவேந்தர் டாக்டர் வி.பாரதி ஹரிசங்கர் தலைமை தாங்கி பேசுகையில், பாதுகாப்பை முழுமையான கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும் என்றும் கட்டமைப்பு, ஒருமைப்பாட்டை மட்டுமல்ல, மனித பாதுகாப்பையும் உள்ளடக்கியது என்றும் எடுத்துரைத்தார்.


தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் சமூக வியலாளர் டாக்டர்.ஐ.பாலு, தலைமை விருந்தினராக கலந்து கொண்டு, பூகம்பங்கள், வெள்ளம், நிலச்சரி வுகள் மற்றும் இடியுடன் கூடிய மழை போன்ற பேரிடர்களை நிர்வகிப்பதில் பெண்களின் திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி, பேரிடர் பாதுகாப்பு குறித்த ஒரு ஈர்க்கக்கூடிய மற்றும் நடைமுறை செயல் விளக்க அமர்வை நடத்தினார்.


இந்த நிகழ்வில் பேரிடர் அபாயக் குறைப்பு கிளப் தொடங்கப்பட்டது. இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்துடன் இணைந்து “இந்திய சூழலில் குழந்தை மையப்படுத்தப்பட்ட பேரிடர் அபாயக் குறைப்பு” என்ற புத்தக வெளியீடும் இடம்பெற்றது.

முன்னதாக, மகளிர் ஆய்வு மையத்தின் இயக்குநர் முனைவர் வி.பிரேமலதா பிரியதர்ஷினி வரவேற்புரை வழங்கினார். சிவில் பொறியியல் துறையின் இணைப் பேராசிரியரும் தலைவருமான முனைவர் ஆர்.நித்யா நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img