fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் நலத்திட்ட உதவிகள்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் நலத்திட்ட உதவிகள்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மாவட்ட தொழில் மையம் சார்பில் நடைபெற்ற தொழில் முதலீடுகள் மாநாட்டில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன்- மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் ரூ.2.04 லட்சம் மானியத்துடன் கூடிய ரூ.8.20 லட்சம் திட்ட மதிப்பிலான 2 பயணியர் ஆட்டோவிற்கான சாவியினை பயனாளிகளிடம் வழங்கினார். அருகில் மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், மாவட்ட ஊராட்சித்தலைவர் பிரம்மசக்தி, மாவட்ட தொழில் மையபொது மேலாளர் ஸ்வர்ணலதா ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img