fbpx
Homeபிற செய்திகள்திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் வாழ்வாதாரம் உயர்ந்து வருகிறது- கனிமொழி எம்.பி. பேச்சு

திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் வாழ்வாதாரம் உயர்ந்து வருகிறது- கனிமொழி எம்.பி. பேச்சு

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குபட்பட்ட மாப்பிள் ளையூரணி பகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்ப ணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி நடைபெற்ற விழா விற்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். சண்முகையா எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார். மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் வரவேற்புரையாற்றினார்.

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம் பாட்டு திட்டத்தின் கீழ் மாப்பிள்ளையூரணியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் ரூ.10.13 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடத்தையும், சிலோன் காலனியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.11.77 லட்சம் மதிப்பில் பொதுவிநியோகக் கடை கட்டிடம் மற்றும் ரூ.13 லட்சம் மதிப்பில் பொதுவிநியோகக் கடை கட்டி டத்தையும் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி திறந்து வைத்து வடக்கு சோட்டையன் தோப்பில் உள்ள அம்பேத்கார் படிப்பகத்தை பார்வையிட்டு வருகை பதிவேட்டில் கையெழுத் திட்டார்.

மேலும், மாப்பிள்ளையூரணி ஊராட்சி வடக்கு சோட்டையன் தோப்பில் ரூ.10 லட்சம் மதிப் பில் பல்நோக்கு கட்டிடம் மற்றும் பூப்பாண்டியாபுரத்தில் ரூ.12.30 லட்சம் மதிப்பில் பொது விநியோகக் கடை கட்டிடத்திற்கு கனிமொழி எம்.பி அடிக்கல் நாட்டி பேசியதாவது:

மாப்பிள்ளையூரணி பகுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். அதிகம் நான் வருகை தந்த இடமாக மாப்பிள்ளையூரணி உள்ளது. அதற்கு காரணம் எப்போதும் சந்திக்கின்ற நேரமெல்லாம் மக்களுக்கு தேவையான அடிப் படை பணிகளை திட்டங் களை செய்து கொடுக்க வேண்டும் என்று சரவணக்குமார் கோரிக்கை வைப்பார். பல பணிகளை தொடங்கி வைப்பதற்கு அழைப்பு விடுத்ததின் பேரில் இது போன்ற நல்ல பணிகள் நடைபெறுகின்றன.

சட்டமன்ற உறுப்பினரும் தனது தொகுதி நிதியின் கீழ் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்களுக்கு அடிக்கடி சொல்வது எல்லாம் கிராமப்புறங்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். என்பது தான்.

கிராமசாலை மேம்பாட்டு நிதி

அதனடிப்படையில் இந்த பகுதியில் 13 கோடியே 32 லட்சம் மதிப்பீல் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. சில பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இந்த பகுதியில் முதலைமைச்சரின் கிராமசாலை மேம்பாட்டு நிதி 2 கோடிக்கு மேல் ஓதுக்கப்பட்டு பணிகள் நடைபெறுகிறது. மின் மயானம் பணியும் நடைபெறுகிறது.

தேர்தல் அறிக்கையில் கூறியபடி பெண்களுக்கு செப் டம்பர் 15ம்தேதி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ1000 வழங்கப்படுகிறது. அதே போல் மதிய உணவு வழங்கப்படுவதை போல் முதலமைச்சரின் காலை உணவு திட்டமும் முதலமைச்சரால் தொடங்கப்பட்டு நடைபெறுகிறது.

அனைவருடைய வாழ்வாதரமும் உயர வேண்டும். கல்வி வளர்ச்சி என எல்லாம் திராவிட மாடல் ஆட்சியில் கிடைக்கின்றது. தமிழக முதல மைச்சருக்கு நீங்கள் அனைவரும் துணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி தாக்கரேசுபம் ஞானதேவ் ராவ், துணைஆட்சியர் (பயிற்சி) பிரபு, தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தா, உதவி அலுவலர் மகேஸ்வரி, பொறியாளர் தளவாய் மேற் பார்வையாளர் முத்துராமன், பொதுவிநியோக திட்ட கூட்டுறவு சார்பதிவாளர் அந்தோணி பட்டுராஜ், துணை பதிவாளர் மாரியப்பன், செயலாற்றியர் சாம் டேனியல்ராஜ், தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, ஆதிதிராவிடநல அணி அமைப்பாளர் ராஜேந்திரன், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஆரோக்கிய மேரி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஸ்டாலின், திமுக ஒன்றிய அவைத்தலைவர் ஜோதிடர் முருகன், துணைச்செயலாளர்கள் கணேசன், வசந்தகுமாரி, ராமசந் திரன், ஹரிபாலகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர்கள் அந் தோணி தனுஷ்பாலன், தொம்மைசேவியர், ஆனந்தி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, மகேஸ்வரி, சக்திவேல், ஜேசு ராஜா, பாண்டியம்மாள், கூட் டுறவு கடன்சங்க செயலாளர் பாலமுருகன், துணைத்தலைவர் சிவக்குமார், மாவட்ட பிரதிநி திகள் தர்மலிங்கம், வெயில்ராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிளோமின்ராஜ், மாவட்ட ஓருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சரஸ்வதி, குழந்தை வளர்ச்சி அலுவலர் திலகா, தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி, ஒன்றிய வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சோனாராஜன், ஒன்றிய மக ளிர் அணி அமைப்பாளர் ஜெஸிந்தா, முன்னாள் ஓன்றிய துணைசெயலாளர் மைக்« கல் ராஜ், மகளிர் அணி சண்முகத்தாய், சிவபாலா, அங்காளஈஸ்வரி, திமுக கிளைச் செயலாளர்கள் பொன்னுச்சாமி, காசி, சுபாஷ், ராமசந்திரன், சுதாகர், சேவியர், முருகன், அன்பு, வேல்ராஜ், சந்திரசேகர், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் மகாராஜன், மற்றும் இளைஞர் அணி ராஜேந்திரன், கௌதம், தனபால், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார் மற்றும் அலுவலர்கள், பொது மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img