fbpx
Homeபிற செய்திகள்திமுக ஆட்சியில் இதுவரை 1400க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு கும்பாபிஷேகம்

திமுக ஆட்சியில் இதுவரை 1400க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு கும்பாபிஷேகம்

தூத்துக்குடியில் புகழ்பெற்ற பெருமாள் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலில் 2000ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதன்பிறகு கும்பாபிஷேக பணிகள் நடைபெறாமல் இருந்தன. இந்நிலையில் பெருமாள் கோவிலுக்கு சுமார் ரூபாய் 6 கோடி மதிப்பில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதற்கான பணிகளை இப்போதே துவங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இந்த கோவிலில் 64 கல் தூண்களுடன் 35 ஆயிரம் சதுரடி பரப்பளவில்; ஆகம விதிகளின் படி பணிகள் நடைபெறுகிறது.

தற்போது பெருமாள் கோவிலில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு, சாமி தரிசனம் செய்து, கல் மண்டபத்திற்கான கல் தூண் நிறுத்தும் பணியினை துவக்கி வைத்து, பின்னர் ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள் ஆகிய கோவில் கட்டுமானப் பணியையும் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பெருமாள் கோவில் கும்பாபிஷேக பணிகள் அடுத்த ஆண்டு சிறப்பாக நடைபெற உள்ளது. அதனையொட்டி கல்மண்டபத்திற்கான கல் தூண் அமைக்கும் பணியை தொடங்கி வைத்துள்ளோம்.

இந்த கட்டுமான பணிகள் பல தொழிலதிபர்கள் பங்களிப்புடன் கட்டுமான பணிகள் வேகமாக நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் பல கோடி மதிப்புள்ள திருக்கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதுவரை 1400க்கும் மேற்பட்ட திருக்கோயில்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, செயல் அலுவலர் தமிழ்செல்வி, ஆய்வாளர் ருக்குமணி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், சிவன் கோவில் அறங்காவல் குழு தலைவர் கந்தசாமி, தெப்பகுளம் மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செல்வசித்ரா அறிவழகன், பெருமாள் கோவில் தலைமை அர்ச்சகர் வைகுண்ட ராமன், மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், பொதுகுழு உறுப்பினர் கோட்டுராஜா, மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர், தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, வட்டச் செயலாளர் கங்காராஜேஷ், வட்டபிரதிநிதி பாஸ்கர், தொழிலதிபர்கள் அழகர் ஜுவல்லர்ஸ் ஜெயராமன், கமலஹாசன் ஜுவல்லர்ஸ் கமலஹாசன், வேலவன் ஹைபர் மேலாளர் சங்கர், முருகன் யாதவ் மற்றும் கருணா, மணி, வேல்பாண்டி, அற்புதராஜ், அல்பர்ட், நெல்லையப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img