fbpx
Homeபிற செய்திகள்போக்குவரத்து ஓய்வூதியர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு

போக்குவரத்து ஓய்வூதியர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு

நவம்பர் 2015 முதல் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்காத அரசின் அலட்சிய போக்கை கண்டித்து, அரசு போக்குவரத்து ஓய்வுதியர் நல மீட்பு சங்கத்தினர் மார்ச் 18-ம் தேதி அனைத்து ஆட்சியர் அலுவலகங்களிலும் மனு செய்தனர்.

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் கவுரவத் தலைவர் வி.சுப்பிரமணியன், தலைவர் டி.கதிரேசன், பொதுச் செயலர் ஏ.தசரதராமன், பொருளாளர் பி.ராஜேந்திரன் கூறியதாவது: இப்பிரச்சினை தொடர்பாக உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும், தங்கள் கோரிக்கையை அரசு பரிசீலிக்கவில்லை.

அதனால், பல ஓய்வூதியதாரர்கள் குறைந்த ஓய்வூதிய பலனைப் பெற்று வறுமையில் வாடுகின்றனர். பல போராட்டங்களை நடத்தினார்கள்.

தங்களது கோரிக்கையை நிறைவேற்றக்கோரி இப்போது, 92000 ஓய்வூதியதாரர்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் நேற்று மனு அளித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img