fbpx
Homeபிற செய்திகள்"நம்மை இணைக்கும் உறவுகள் நம்மைப் பிரிக்கும் தடைச்சுவர்களை விட வலிமையானதாக இருக்க வேண்டும்." - மார்...

“நம்மை இணைக்கும் உறவுகள் நம்மைப் பிரிக்கும் தடைச்சுவர்களை விட வலிமையானதாக இருக்க வேண்டும்.” – மார் பால் ஆலப்பட்

நம்மை இணைக்கும் உறவுகள் நம்மைப் பிரிக்கும் தடைச்சுவர்களை விட வலிமையானதாக இருக்க வேண்டும் இராமநாதபுரம் சீரோ மலபார் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் ஆயர் மார் பால் ஆலப்பாட், சில நம்பிக்கை விஷயங்களில் பிளவுபட்டுள்ள பல்வேறு கிறிஸ்தவ தேவாலயங்கள், தங்கள் வேறுபாடுகளை மறந்து, இயேசு கிறிஸ்துவின் பெயரால் அவர்கள் உடன்படக்கூடிய அனைத்து பகுதிகளிலும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். நமக்கு ஒரே இறைவன், ஒரே நம்பிக்கை, ஒரே ஞானஸ்நானம்.
(எபேசியர் 4:5).

CCEF என்பது பல்வேறு திருச்சபைகளின் ஒன்றியம் அல்ல, மாறாக கோயம்புத்தூரில் உள்ள பல்வேறு தேவாலயங்களின் ஒன்றியம் என்றும் அவர் கூறினார்.

கோவையில் மார்த்தோமா பாரம்பரியத்துடன் கூடிய எபிஸ்கோபல் தேவாலயங்களின் ஒன்றியமான கோவை கிறிஸ்தவ எக்குமெனிகல் பெல்லோஷிப் (CCEF) ஏற்பாடு செய்த கிறிஸ்து ஜெயந்தி விழா மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பங்கேற்ற பிறகு அவர் பேசினார். CMI பிரெஷிதா மாகாணம் கோவை ப்ரோவின் ஷியல் அருட்தந்தை. சாஜு சக்காலக்கல் CMI, இராமநாதபுரம் மறைமாவட்ட SMRC தலைவர் அருட்தந்தை. கைல்ஸ் வெலியானா OFM.Conv, கோவை ஜெய் ராணி மாகாண ப்ரோவின் ஷியல் அருட்சகோதரி ஷாலினி CMC, கோவை ஆரோக்கிய மாதா துணை மாகாண ப்ரோவின்ஷியல் அருட் சகோதரி டாக்டர் புஷ்பா CHF ஆகியோர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மார் தோமா பாரம்பரியத்தை சுமந்து செல்லும் 9 வெவ்வேறு சபைகளிலிருந்தும், கோவையில் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்களிலிருந்தும் சுமார் 15 பாடகர் குழுக்களின் கிறிஸ்துமஸ் கரோல்கள் மற்றும் ஸ்கிட்கள் இருந்தன. குனியமுத்தூர் செயிண்ட் மார்க்ஸ் தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தலைமை விருந்தினரான கோவை இராமநாதபுரம் சீரோ மலபார் கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் மார் பால் ஆலப்பாட் கிறிஸ்துமஸ் செய்தியை வழங்கினார். CCEF ன் தலைவர் அருட்தந்தை ஜான்சன் வீப்பாட்டுபரம்பில், செயலாளர் டென்னி.சி. சாக்கோ, ஒருங்கிணைப்பாளர் எம்.ஏ. ஜேம்ஸ், பொருளாளர் ஜீன் ஜான், குனியமாத்தூர் கிறிஸ்துமஸ் கொண்டாட்டக் குழு ஒருங்கிணைப்பாளரும் குனியமுத்தூர் செயிண்ட் மார்க்ஸ் தேவாலய
பங்குதந்தையுமான அருட்தந்தை பிஜோ பாலயில், திட்ட ஒருங்கிணைப்பாளர் மனோஜ் அகஸ்டின், பில்ஜோ பால்சன், சன்னி ஜோசப் , செய்தி தொடர்பாளர் சந்தோஷ் ஜி மற்றும் பங்கு அறங்காவலர்களான ஜிஜோ ஜார்ஜ் வலிய பரம்பில் மற்றும் வர்கீஸ் போல் மானுவேல் ஆகியோர் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்கினர்.

படிக்க வேண்டும்

spot_img