Homeபிற செய்திகள்பூதக்கண்ணாடி, சூரிய ஒளியை பயன்படுத்தி வரையப்பட்ட சுனிதா வில்லியம்ஸ் ஓவியம்

பூதக்கண்ணாடி, சூரிய ஒளியை பயன்படுத்தி வரையப்பட்ட சுனிதா வில்லியம்ஸ் ஓவியம்

சுமார் 9 மாதங்களுக்கு பிறகு சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பிய நிலையில் கோவை குனியமுத்தூரை சேர்ந்த கலைஞர் யுஎம்டி.ராஜா, பூதக் கண்ணாடியால் சூரிய ஒளியை பயன்படுத்தி சுனிதா வில்லியம்ஸ் படத்தை மர பலகையில் வரைந்துள்ளார்.
இதனை வாய்ப்பு இருந்தால் சுனிதா வில்லியம்ஸிடம் கொடுக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
கிட்டத் தட்ட 10 மணி நேரம் செலவ ழித்து இந்த ஓவியத்தை வரைந்துள்ளதாக கூறிய நிலையில், இதில் சுனிதா வில்லியம்ஸ் படம், அவர் விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பிய ட்ராகன் கலன் ஆகிய படங்களும், Welcome Back Sunita
என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img